×

குப்பையை அகற்றிய அமைச்சர்

கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் வீட்டின் முன்பு குவிந்திருந்த இலைகளை துப்புரவு செய்த காட்சி சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதி எம்எல்ஏவும் கல்வித்துறை அமைச்சருமான சுரேஷ்குமார் எளிமைக்கு பெயர் பெற்றவர்.  கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பெங்களூரு பசவேஸ்வரா நகரிலுள்ள சுரேஷ்குமார் வீட்டின் சுற்றுப்பகுதியில் மரங்கள் அதிகம் காணப்படுவதால் ரோடுகளில் இலைகள் உதிர்ந்து கிடந்தன.

ரோட்டை சுத்தம் செய்யும் பணிக்கு ஊழியர்கள் வரவில்லை என்பதால் அமைச்சர் சுரேஷ்குமார் மற்றும் அவரின் மனைவி இரண்டு பேரும் இலைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் சுரேஷ்குமார் தூய்மை பணியில் ஈடுபடுவதை ஒருவர் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அமைச்சர் சுரேஷ்குமாரின் இந்த செயலை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Tags : Minister , Karnataka Education Minister Suresh Kumar, Garbage, Corona
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...